வாக்காளர் சிறப்பு திருத்தத்துக்கு ஏற்பாடு: தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

16 hours ago 5

Last Updated : 22 Sep, 2025 07:44 AM

Published : 22 Sep 2025 07:44 AM
Last Updated : 22 Sep 2025 07:44 AM

<?php // } ?>

புதுடெல்லி: சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள, அக்டோபர் 30-ம் தேதிக்குள் வாக்காளர் பட்டியலுடன் தயார் நிலையில் இருக்கும்படி மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளின் மாநாடு இந்த மாதம் தொடக்கத்தில் நடந்தது. அப்போது சிறப்பு தீவிர திருத்தத்துக்கு, வரும் அக்டோபர் 30-க்குள் கடைசியாக திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலுடன் தயார் நிலையில் இருக்கும்படி தேர்தல் ஆணையம் கூறியது. இதையடுத்து பல மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

டெல்லி தலைமை தேர்தல் அதிகாரியின் இணைய தளத்தில் கடந்த 2008-ம் ஆண்டு கடைசியாக மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் திருத்த பட்டியலை வெளியிட்டுள்ளார். பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தம் முடிந்தபின், நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 2026-ம் ஆண்டில் அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

வங்கதேசம் மற்றும் மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியவர்கள் பல மாநிலங்களில் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களை நீக்குவதே, சிறப்பு தீவிர திருத்தத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்...

Follow

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

Read Entire Article