ரயிலின் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பெட்ஷீட், கம்பளி திருடிய பயணிகள் சிக்கினர்

15 hours ago 4

Last Updated : 22 Sep, 2025 08:32 AM

Published : 22 Sep 2025 08:32 AM
Last Updated : 22 Sep 2025 08:32 AM

<?php // } ?>

புதுடெல்லி: டெல்​லி- ஒடிசா புருசோத்​தம் எக்​ஸ்​பிரஸ் ரயி​லில் முதல் வகுப்பு ஏ.சி பெட்​டி​யில் பயணம் செய்த பயணி​கள் சிலர் படுக்கை விரிப்​பு, கம்​பளி ஆகிய​வற்றை தங்​கள் பைகளில் எடுத்​துச் சென்று சிக்​கினர். தொலை தூர ரயி​லில்​களில் தூங்​கும் வசதி கொண்ட ஏ.சி பெட்​டி​யில் பயணம் செய்​யும் பயணி​களுக்கு படுக்கை விரிப்​பு​கள், கம்​பளி ஆகியவை வழங்​கப்​படும்.

இரவில் தூங்​கும்​போது அவற்றை பயன்​படுத்​திய பின், பயணி​கள் அவற்றை தங்​கள் இருக்​கை​யில் வைத்து விட்டு செல்​வது வழக்கம். புரியி​லிருந்து டெல்​லிக்கு செல்​லும் புருசோத்​தம் எக்​ஸ்​பிரஸ் ரயி​லின் முதல் வகுப்பு ஏ.சி பெட்​டி​யில் ஒரு பெண்​ணும், 2 ஆண்​களும் பயணம் செய்​தனர். அவர்​கள் டெல்​லி​யில் இறங்​கும்​போது அந்த படுக்கை விரிப்​பு​களை​யும், கம்​பளியை​யும், மடித்து தாங்​கள் கொண்டு வந்த பைகளில் வைத்​துள்​ளனர்.

இதைப் பார்த்த ரயில் டிக்​கெட் பரிசோதகர் மற்​றும் உதவி​யாளர், அந்த பயணி​களிடம் படுக்கை விரிப்​பு​கள் மற்​றும் கம்​பளியை இது​போல் திருடு​வது நியா​யமா? என கேட்​டுள்​ளனர். அவற்றை திருப்பி கொடுங்​கள் அல்​லது ரூ.780 அபராதம் செலுத்​துங்​கள் என கூறி​யுள்​ளனர். அப்​போது அந்த பயணி​களில் ஒரு​வர், தனது தாய் தவறு​தலாக படுக்கை விரிப்பை மடித்து பையில் வைத்​து​விட்​டார் என கூறி சமாளித்​தார். அவர்​களை டிடிஇ மற்​றும் ரயில்வே உதவி​யாளர் ஆகியோர் எச்​சரித்து அனுப்​பினர்.

இந்த வீடியோ சமூக ஊடகத்​தில் வைரலாக பரவியது. இந்த வீடியோவை பார்த்த பலர், ஏ.சி முதல் வகுப்​பில் பயணம் செய்​வது பெரு​மை​யான விஷ​யம். ஆனால், அதில் பயணம் செய்​பவர்​களும் இது போல் திருடு​வது மிக​வும் கீழ்​த்தர​மான செயல்​ என விமர்​சித்தனர்​.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்...

Follow

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

Read Entire Article