ஞாயிற்றுக்கிழமை ரசிகர்களுக்கு சிறப்பானதாக அமையும்: கேப்டன் சூர்யகுமார் யாதவ் நம்பிக்கை

1 day ago 3

Last Updated : 21 Sep, 2025 09:09 AM

Published : 21 Sep 2025 09:09 AM
Last Updated : 21 Sep 2025 09:09 AM

<?php // } ?>

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 4 சுற்​றில் இந்​தியா - பாகிஸ்​தான் அணி​கள் இன்று மோதுகின்​றன. இதுதொடர்​பாக நேற்று நடை​பெற்ற பத்​திரி​கை​யாளர்​கள் சந்​திப்​பில் இந்​திய அணி​யின் கேப்​டன் சூர்​யகு​மார் யாதவ் பங்​கேற்​றார். 12 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த நிகழ்​வில் 6 கேள்வி​கள் கேட்​கப்​பட்​டன.

இதில் எந்த இடத்​தி​லும் சூர்​யகு​மார் யாதவ், பாகிஸ்​தான் அணி​யின் பெயரை குறிப்​பிட​வில்​லை. ஆனால் 140 கோடி ரசிகர்​களுக்​கும் ஞாயிற்​றுக்​கிழமை சிறப்​பான​தாக இருக்​கும் என அவர், தெரி​வித்​தார். இதுதொடர்​பாக சூர்​யகு​மார் யாதவ் கூறிய​தாவது: ஆசிய கோப்பை தொடருக்​காக சிறந்த முறை​யில் தயா​ரானோம். மூன்று சிறந்த ஆட்​டங்​களை விளை​யாடி உள்​ளோம். சிறந்த முடிவை பெறு​வதற்கு என்ன செய்ய முடி​யுமோ அதில் கவனம் செலுத்​துகிறோம். கடந்த 3 ஆட்​டங்​களி​லும் நாங்​கள் செய்​துள்ள நல்ல பழக்​கங்​களை தொடர விரும்​பு​கிறோம்.

இந்த தொடரில் நாங்​கள் ஒரு​முறை விளை​யாடி​யுள்​ளோம் (பாகிஸ்​தான் அணிக்கு எதி​ராக என்​பதை கூற​வில்​லை). அதில் நாங்​கள் சிறந்த ஆட்​டத்தை வெளிப்​படுத்​தினோம். ஆனால், அது எங்​களுக்கு சாதகத்தை தராது. நாங்​கள் புதி​தாகத் தொடங்க வேண்​டும், யார் நன்​றாக விளை​யாடு​கிறார்​களோ அவர்​கள் வெற்றி பெறு​வார்​கள்.

நாங்​கள் இப்​போது மூன்று ஆட்​டங்​களில் விளை​யாடி​யுள்​ளோம், மூன்​றி​லும் வெற்றி பெற்​றது சம அளவி​லான மகிழ்ச்​சி​யாக உள்​ளது. ஓமனுக்கு எதி​ரான ஆட்​டம் எங்​களது முந்​தைய ஆட்​டத்​தைப் போலவே மிக​வும் வேடிக்​கை​யாக இருந்​தது. கடந்த போட்​டி​யில் பேட்​டுக்​கும் பந்​துக்​கும் இடையே நல்ல போட்டி இருந்​தது. கடந்த முறை நாங்​கள் வெற்றி பெற்​றோம், ரசிகர்​கள் மகிழ்ச்​சி​யாக இருந்​தார்​கள். எங்​கள் நாட்​டின் ஆதரவு எங்களுக்கு எப்​போதும் கிடைக்​கும். நாங்​கள் விளை​யாடும் ஒவ்​வொரு ஆட்​டத்​தி​லும் எங்​களுக்கு ஆதரவு கிடைக்​கும்.

ஞாயிற்​றுக்​கிழமை, அதி​க​மான மக்​கள் போட்​டியைப் பார்ப்​பார்​கள். அவர்​கள் உட்​கார்ந்து விளை​யாட்டை ரசிக்க வேண்​டும். மைதானத்​தில் அதே தீவிரத்​துட​னும், அதே ஆற்​றலுட​னும் விளை​யாடு​வோம். எப்​போதும் போன்று உயர்தர ஆட்​டத்தை வெளிப்​படுத்த முயற்சி செய்​வோம். 140 கோடி ரசிகர்​களுக்​கும் ஞா​யிற்​றுக்கிழமை சிறப்​பான​தாக அமை​யும்​. இவ்​வாறு சூர்​யகு​மார்​ யாதவ்​ கூறி​னார்​.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்...

Follow

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

Read Entire Article