இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை: டெல்லியில் இன்று தொடக்கம்

6 days ago 5

Last Updated : 16 Sep, 2025 07:49 AM

Published : 16 Sep 2025 07:49 AM
Last Updated : 16 Sep 2025 07:49 AM

<?php // } ?>

புதுடெல்லி: இந்​தி​யா, அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்​பந்​தம் ஏற்​படுத்​து​வது தொடர்​பாக 5 சுற்று பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. ஆனால், அமெரிக்க வேளாண் விளைபொருட்​கள், பால் பொருட்​களுக்​கான சந்​தையை திறக்க வேண்​டும் என்ற அமெரிக்​கா​வின் கோரிக்​கையை இந்​தியா ஏற்​க​வில்​லை. இதனால் உடன்​பாடு ஏற்​படு​வ​தில் தாமதம் ஏற்​பட்​டது.

இதற்கு நடு​வே, இந்​திய பொருட்​கள் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 25% வரி விதித்​தார். அத்​துடன் ரஷ்​யா​விடம் கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தாகக் கூறி வேறு எந்த நாட்​டுக்​கும் இல்​லாத வகை​யில் கூடு​தலாக 25 சதவீதம் வரி விதித்​தார்.

இதன் மூலம் இந்​திய பொருட்​கள் மீது 50 சதவீத வரி விதிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்​பட்​ட​தால் ஆகஸ்ட் மாதம் நடை​பெற இருந்த 6-வது சுற்று பேச்​சு​வார்த்தை தடைபட்​டது.

இதுகுறித்து இந்​திய வர்த்தக அமைச்​சகத்​தின் மூத்த அதி​காரி கூறும்​போது, “6-வது சுற்று பேச்​சு​வார்த்தை செவ்​வாய்க்​கிழமை (இன்​று) மீண்​டும் தொடங்க உள்​ளது’’ என்​றார். இந்த பேச்​சு​வார்த்​தை​யில் இந்​தி​ய பிர​தி​நி​தி​யும் வர்த்தக துறை சிறப்பு செய​லா​ள​ரு​மான ராஜேஷ் அகர்​வால் தலை​மையி​லான குழு பங்​கேற்கிறது.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்...

Follow

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

Read Entire Article