சோபியான்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இன்று அதிகாலை நிகழ்ந்த மோதலில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
பதுங்கி இருந்த பயங்கரவாதிகள்: ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள மூஞ்ச் மார்க் எனும் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.
GIPHY App Key not set. Please check settings