பெண் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்​டதாக குற்றச்சாட்டு: விசாரணையை தொடங்க ஐகோர்ட் உத்தரவு

2 days ago 4

Last Updated : 20 Sep, 2025 05:42 AM

Published : 20 Sep 2025 05:42 AM
Last Updated : 20 Sep 2025 05:42 AM

<?php // } ?>

சென்னை: தூய்​மைப் பணி​யாளர்​கள் போராட்​டத்​தின்​போது பெண் வழக்​கறிஞர்​கள் தாக்​கப்​பட்​ட​தாக, போலீ​ஸார் மீதான குற்​றச்​சாட்டு குறித்து ஓய்​வு​பெற்ற நீதிபதி தனது விசா​ரணையை தொடங்க உயர் நீதி​மன்​றம் அனு​ம​தி​யளித்​துள்​ளது. சென்னை மாநக​ராட்சி 5-வது மற்​றும் 6-வது மண்​டலத்​தில் தூய்​மைப் பணி​களுக்​கான பொறுப்பை தனி​யாரிடம் ஒப்​படைத்​ததை எதிர்த்து தூய்​மைப் பணி​யாளர்​கள், மாநக​ராட்சி அலு​வல​கம் முன்​பாக தொடர் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

பின்​னர், உயர் நீதி்மன்ற உத்​தர​வுப்​படி போராட்​டத்​தில் ஈடு​பட்ட தூய்மை பணி​யாளர்​களை போலீ​ஸார் அப்​புறப்​படுத்​தி​ய​போது பெண் வழக்​கறிஞர்​கள் உள்​ளிட்ட 12 வழக்​கறிஞர்​களை போலீ​ஸார் தாக்​கிய​தாகக் கூறி, உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது. அந்த வழக்கை விசா​ரித்த நீதிப​தி​கள் எம்​.எஸ்​.ரமேஷ், வி.லட்​சுமி நாராயணன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, இதுதொடர்​பாக ஓய்​வு​ பெற்ற நீதிபதி வி.​பார்த்​திபன் தலை​மை​யில் ஒருநபர் ஆணை​யம் அமைத்து விசா​ரிக்க உத்​தர​விட்​டனர்.

இந்​நிலை​யில், இந்த உத்​தரவை மாற்​றியமைக்​கக் கோரி போலீ​ஸார் தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​ட​தால், ஒருநபர் ஆணை​யம் தொடர்​பான உத்​தரவை மற்​றொரு அமர்வு நிறுத்தி வைத்​தது. இந்​நிலை​யில், வழக்​கறிஞர்​களை போலீ​ஸார் தாக்​கியது தொடர்​பான பொதுநல வழக்கு விசா​ரணை தலைமை நீதிபதி எம்​.எம்​.வஸ்​த​வா, நீதிபதி ஜி.அருள்​முரு​கன் அமர்​வில் நடந்​தது. அப்​போது இந்த விவ​காரத்​தில், ஒருநபர் ஆணை​யம் அமைத்​தது தொடர்​பான வழக்​கும் சேர்த்து விசா​ரிக்​கப்​பட்​டது.

பாதிக்​கப்​பட்ட வழக்​கறிஞர்​கள் தரப்​பில் வழக்​கறிஞர்​கள் ஆர்​.சங்​கரசுப்​பு, ஆர்​.கிருஷ்ணகு​மார் ஆகியோர் ஆஜராகி, “இது தொடர்​பாக விசா​ரிக்க ஒருநபர் ஆணை​யம் அமைத்து ஏற்​கெனவே விசா​ரித்த முதல் அமர்வு உத்​தர​விட்​டது. ஆனால், எங்​களுக்கு எந்​தவொரு நோட்​டீஸும் கொடுக்​காமல் அந்த வழக்கை விசா​ரித்த இரண்​டாவது அமர்​வு, ஒருநபர் ஆணை​யத்​தின் விசா​ரணையை நிறுத்தி வைத்​துள்​ளது” என்​றனர்.

அதற்கு அரசு கூடு​தல் தலைமை வழக்​கறிஞர் ஜெ.ர​வீந்​திரன் ஆஜராகி, “மனு​தா​ரர்​கள் தங்​களது கோரிக்​கை​யில் ஒருநபர் ஆணை​யம் அமைக்க வேண்​டும் என கோராத​போது, அரசு தரப்​பில் விளக்​கம் கோராமல் அப்​போதைய அமர்வு ஒருநபர் ஆணை​யம் அமைத்து உத்​தர​விட்​டது. அப்​படியே அமைப்​ப​தாக இருந்​தா​லும் வேறு ஒரு​வர் தலைமையில் ஆணை​யம் அமைக்​கலாம்” என்​றார்.

அப்​போது நீதிப​தி​கள், நடந்த சம்​பவம் குறித்து இருதரப்​பும் ஒரு​வர் மீது ஒரு​வர் புகார் கூறிக்​கொண்டே சென்​றால் பிரச்​சினைக்​குத் தீர்வு கிடைக்​காது. ஓய்​வு​பெற்ற நீதிபதி வி.​பார்த்​திபன் தலை​மை​யில் அமைக்​கப்​பட்ட ஒருநபர் ஆணை​யத்தை கண்டு ஏன் தமிழக அரசு அச்​சப்பட வேண்டும். எனவே, இதுதொடர்​பாக ஓய்​வு​பெற்ற நீதிபதி தனது விசா​ரணையை தொடங்​கலாம் என உத்​தர​விட்​டு வி​சா​ரணை​யை அக்​.10-ம்​ தேதிக்​கு தள்ளிவைத்துள்ளனர்.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்...

Follow

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

Read Entire Article