பதவி உயர்வு பட்டியலில் தகுதியானவர்களை சேர்க்கவில்லை: தலைமைப் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்

2 days ago 4

Last Updated : 20 Sep, 2025 06:16 AM

Published : 20 Sep 2025 06:16 AM
Last Updated : 20 Sep 2025 06:16 AM

பதவி உயர்வில் குளறுபடி என கூறி, அண்ணாசாலை மின்வாரிய தலைமைப் பொறியாளர் அலுவலகத்தை ஊழியர்கள் முற்றுகையிட்டு நுழைவாயில் அருகே போராட்டம் நடத்தினர். | படம்: எல்.சீனிவாசன் |
<?php // } ?>

சென்னை: ப​தவி உயர்​வுக்​கு தகு​தி​யான 26 பேரின் பெயர்​களை பட்​டியலில் சேர்க்​க​வில்லை எனக் கூறி, மின்​வாரிய தலை​மையகத்​தில் உள்ள தலை​மைப் பொறி​யாளர் அலு​வல​கத்தை முற்​றுகை​யிட்​டு, ஊழியர்​கள் போ​ராட்​டம் நடத்​தி​ய​தால் பரபரப்பு ஏற்​பட்​டது.

மின்​வாரி​யத்​தில் பணிபுரி​யும் ஊழியர்​களுக்கு பணி மூப்பு அடிப்​படை​யில் பதவி உயர்வு வழங்​கப்​பட்டு வரு​கிறது. இதற்​காக, அவர்​கள் பணிபுரி​யும் வட்​டத்​தின் தலைமை அலு​வலர், சம்​பந்​தப்​பட்ட ஊழியரின் திறன் மதிப்​பீட்டு அறிக்கை உள்​ளிட்​ட​வற்​றுடன் பட்​டியல் தயாரித்து தலை​மையகத்​துக்கு அனுப்​புவது வழக்​கம். அதனடிப்​படை​யில், தேர்வு செய்​யப்​பட்டு பதவி உயர்வு வழங்​கப்​படும்.

மின்வாரிய விதி: மேலும், உயர் பதவி​யும், ஏற்​கெனவே பணிபுரி​யும் அலு​வல​கம் அல்​லது அதற்கு அரு​கில் உள்ள அலு​வல​கத்​திலேயே வழங்​கப்பட வேண்​டும் என்​பது வாரிய விதி. ஆனால், இது​போன்ற விதி​களை பின்​பற்​றாமல் பதவி உயர்வு வழங்​கப்​படு​வ​தாக தொடர் குற்​றச்​சாட்டு எழுந்​தது.

குறிப்​பாக, அண்​மை​யில் கணக்கு மேற்​பார்​வை​யாளர் பதவி​யில் இருந்து உதவி கணக்கு அலு​வல​ராக 96 பேர் அடங்​கிய பட்​டியல் உரு​வாக்​கப்​பட்​டது. இதில், 93 பேருக்கு பதவி உயர்வு வழங்​கப்​பட்​டுள்​ளது.

இதி​லும், பதவி உயர்​வுக்​கு தகு​தி​யான 26 பேரின் பெயர்​களை பட்​டியலில் சேர்க்​க​வில்லை எனக் கூறி, மின் ஊழியர் மத்​திய அமைப்பு (சிஐடி​யு) மாநிலத் தலை​வர் எஸ்​.கண்​ணன் தலை​மை​யில், சென்​னை, அண்​ணா​சாலை​யில் உள்ள மின்​வாரிய தலை​மையகத்​தில் ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

குறிப்​பாக, பணி​யமைப்பு பிரிவு தலை​மைப் பொறி​யாளர் அலு​வல​கத்தை முற்​றுகை​யிட்ட ஊழியர்​கள், வாரிய விதிப்​படி பதவி உயர்வு வழங்க வலி​யுறுத்​தினர். இதைத் தொடர்ந்​து, அவர்​களை அழைத்து பேசிய தலை​மைப் பொறி​யாளர் அம்​பி​கா, தற்​போது வழங்​கப்​பட்ட பதவி உயர்வை நிறுத்தி வைப்​பதுடன், பதவி உயர்​வின்​போது வாரிய வி​தி​கள் பின்​பற்​றப்​படும் என உறுதியளித்துள்​ளார்​.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்...

Follow

FOLLOW US

தவறவிடாதீர்!

Read Entire Article