Last Updated : 25 Jun, 2023 06:23 AM
Published : 25 Jun 2023 06:23 AM
Last Updated : 25 Jun 2023 06:23 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
விழாவின் தொடக்கமாக நேற்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மகா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் ஹோமங்களுடன் பூஜைகள் நடைபெற்றன.
பிரதான கொடிமரத்துக்கு அருகில் சுவாமி-அம்பாள் எழுந்தருள கொடிப்பட்டத்துக்கு பூஜைகள் நடைபெற்றன. காலை 7.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து கொடி மரத்துக்கு 16 வகை பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று, சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு சுவாமி, அம்மன் பூங்கோயில் சப்பரத்தில் திருவீதியுலா நடைபெற்றது.
இத்திருவிழா ஜூலை 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. விழா நாட்களில் காலை, மாலையில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா நடைபெறும். ஜூலை 2-ல் தேரோட்டம், 10-ம் நாளில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
தவறவிடாதீர்!
- நாகர்கோவில் | குளத்தில் மீன்பிடித்தபோது கட்டுக்கட்டாக சிக்கிய 2,000 ரூபாய் நோட்டுகள்
- மக்களவை தேர்தல்: ஜூலை 1-ம் தேதி ஓபிஎஸ் ஆலோசனை
- பத்திரப் பதிவு துறையில் இதுவரை ரூ.25,000 கோடி வருவாய் - அமைச்சர் பி.மூர்த்தி தகவல்
- தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டம் - மறுபரிசீலனை செய்ய ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
Sign up to receive our newsletter in your inbox every day!