சென்செக்ஸ் 232 புள்ளிகள் உயர்வு

1 month ago 22

செய்திப்பிரிவு

Last Updated : 07 Aug, 2023 07:06 PM

Published : 07 Aug 2023 07:06 PM
Last Updated : 07 Aug 2023 07:06 PM

<?php // } ?>

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 232 புள்ளிகள் (0.35 சதவீதம்) உயர்வடைந்து 65,953 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 80 புள்ளிகள் (0.41 சதவீதம்) உயர்ந்து 19,597 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளை ஏற்றத்துடன் தொடங்கின. காலை10:10 மணி நிலவரப்படி, சென்செக் 167.47 புள்ளிகள் உயர்வடைந்து 65,888.72 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 27.90 புள்ளிகள் உயர்ந்து 19,544.90 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளில் கலவையான சூழல் நிலவிய போதும், தகவல் தொழில்நுட்பம், பார்மா பங்குகளின் வாங்குதல்களால் இந்தியப் பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தை ஏற்றத்துடன் நிறைவு செய்தன. இருந்த போதிலும் வெளிநாட்டு நிதியின் அதிகப்படியான வெளியேற்றம் லாபத்தை மட்டுப்படுத்தியது. பெரும்பாலான பங்குகள் உயர்வில் இருந்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 232.23 புள்ளிகள் உயர்வடைந்து 65,953.48 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 80.30 புள்ளிகள் உயர்ந்து 19,597.30 ஆக இருந்தது

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எம் அண்ட் எம், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டிசிஎஸ், இன்போசிஸ், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல் ஹிந்துஸ்தான் யுனிலீவர், மாருதி சுசூகி, டெக் மகேந்திரா, விப்ரோ, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ரிலைன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ பேங்க், இன்டஸ்இன்ட் பேங்க், எல் அண்ட் டி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், பாரதி ஏர்டெல், டைட்டன் கம்பெனி, ஏசியன் பெயின்ட்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட் பங்குகள் உயர்வடைந்திருந்தன.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா மோட்டார்ஸ், கோடாக் மகேந்திரா பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல், நெஸ்ட்லே இந்தியா, ஹெச்டிஎஃப்சி பேங்க், என்டிபிசி பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

தவறவிடாதீர்!

Read Entire Article