சிபிசிஎல் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதி மூலம் சென்னையில் 300 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள்: உதயநிதி வழங்கினார்

2 days ago 4

Last Updated : 20 Sep, 2025 06:12 AM

Published : 20 Sep 2025 06:12 AM
Last Updated : 20 Sep 2025 06:12 AM

<?php // } ?>

சென்னை: சென்​னை​யில் சிபிசிஎல் நிறு​வனத்​தின் சிஎஸ்​ஆர் நிதி மூலம், 300 மாற்​றுத் திற​னாளிகளுக்​கு, உதவி உபகரணங்​களை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் வழங்​கி​னார். சென்னை பெட்​ரோலி​யம் கார்ப்​பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) நிறு​வனத்​தின் சமூக பங்​களிப்பு நிதி​யின் கீழ், ரூ.75 லட்​சம் மதிப்​பீட்​டில் 300 மாற்​றுத் திற​னாளி​களுக்கு செயற்கை கால்​கள், பேட்​டரி​யால் இயங்கும் 4 சக்கர நாற்​காலிகள் உள்​ளிட்ட உதவி உபகரணங்​களை வழங்​கும் நிகழ்ச்சி திரு​வொற்​றியூரில் நேற்​று​ முன்​தினம் நடைபெற்றது.

துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் தலைமை தாங்கி மாற்​றுத் திற​னாளி​களுக்கு உதவி உபகரணங்​களை வழங்​கி​னார். தொடர்ந்து சேப்​பாக்​கம் - திரு​வல்​லிக்​கேணி சட்​டப்​பேரவை தொகு​தி​யில், கழி​வுநீரகற்று பணி மேற்​கொள்​வதற்​காக, ரூ.1.50 கோடி மதிப்​பில் நவீன இயந்​திரம் பொருத்​தப்​பட்ட கழி​வுநீரகற்று வாக​னத்தை கொடியசைத்து அனுப்பி வைத்​தார்.

பின்​னர், அவர் பேசி​ய​தாவது: மாற்​றுத்திற​னாளி​களை மாற்றத்​துக்​கான திற​னாளி​களாக நம் முதல்வர் உயர்த்​திக் கொண்டு இருக்​கிறார். அந்த வகை​யில், மாற்​றுத் திறனாளி​களை உள்​ளாட்சி அமைப்பு​களில், நியமன முறை​யில் தேர்ந்​தெடுக்க வேண்​டும் என்ற கோரிக்​கையை ஏற்​று, அதற்​கான அறி​விப்பை வெளி​யிட்​டார்.

இதன்​மூலம், 15 ஆயிரம் மாற்​றுத் திற​னாளி​கள் மக்​கள் பிர​தி​நி​தி​களாக தேர்ந்​தெடுக்​கப்பட உள்​ளனர். மாற்​றுத்திற​னாளி​களுக்​கான பராமரிப்​புத் தொகை ரூ.2 ஆயிர​மாக உயர்த்​தப்​பட்​டுள்​ளது. வெளி​நாடு​களில் நடை​பெறுகின்ற விளை​யாட்​டுப் போட்​டிகளில் பங்​கேற்க இது​வரை 200 மாற்​றுத் திற​னாளி​களுக்​கு, தமிழ்​நாடு சாம்​பியன்ஸ் அறக்​கட்​டளை மூலம், ரூ.5 கோடி வரை நிதி வழங்​கப்​பட்​டுள்​ளது.

சர்​வ​தேச மற்​றும் தேசிய போட்​டிகளில் பதக்​கம் வென்ற 200 வீரர்​களுக்கு ரூ.25 கோடி பரிசுத் தொகை, கடந்த ஆண்​டில் 5 மாற்​றுத் திற​னாளி விளை​யாட்டு வீரர்​களுக்கு அரசு வேலை வழங்​கப்​பட்​டிருக்​கிறது. தொடர்ந்து விளை​யாட்​டுத் துறை மூல​மாக 20 பேருக்கு அரசு வேலை வழங்க நடப்​பாண்​டில் இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் பேசி​னார்.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்...

Follow

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

Read Entire Article