Last Updated:October 01, 2025 3:07 PM IST
“கரூர் சம்பவத்துக்கு அதிகார பசியும், பேராசையும் தான் காரணம்” என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.
“கரூர் சம்பவத்துக்கு அதிகார பசியும், பேராசையும் தான் காரணம்” என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சந்தோஷ் நாரயணன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கரூர் சம்பவம் என்னுள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. முற்றிலும் உடைந்துவிட்டேன். மன்னிக்கமுடியாத இந்த துயரத்திலிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களும், உறவினர்களும் மன அமைதியை பெற வேண்டிக்கொள்கிறேன். இந்த சம்பவத்தால் எனக்குள் ஏற்பட்ட வேதனை, கோபம், உதவியற்ற நிலை ஆகியவற்றிலிருந்து என்னை மீட்டெடுக்க சில நாட்கள் எடுத்துக்கொண்ட. அதற்கு மன்னிக்கவும்.
அடங்காத பேராசை, அதிகாரம், புகழுக்கான பசி, மக்களின் எண்ணத்தை எளிதாக மாற்றும் அதனுடன் இன்னும் அதிக அதிகாரத்திற்கும் செல்வத்திற்கும் கொண்ட பேய்த்தனமான தாகம் இவை அனைத்துமே நம்மை இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளன.
The loss of innocent lives in the Karur stampede feels deeply personal and has truly shattered me. I sincerely wish the families and friends of the victims find peace in the face of this unforgivable tragedy. I am sorry it took a while for me to collect myself from the hurt,…
— Santhosh Narayanan (@Music_Santhosh) September 30, 2025
நாம் அனைவரும் குடும்பமாக இணைந்து வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் சூழலை உருவாக்காவிட்டால் இவை தொடர்ந்துகொண்டேயிருக்கும். இன்றைய டிஜிட்டல் உலகில் இது சாத்தியம். நாம் அந்த நிலையை அடையும் வரை, நமக்குள் வேறுபட்ட கருத்துக்கள் இருந்து கொண்டிருக்கலாம்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த அப்பாவியான, அழகான ஆன்மாக்கள் சாந்தியடையட்டும். நீங்கள் அனைவரும் உங்களைக் கவனித்துக்கொள்ளுங்கள். உங்கள் நல்ல ஆரோக்கியத்திற்கும் அமைதிக்கும் இறைவனை வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சினிமா, தொலைக்காட்சி மற்றும் ஓடிடி அப்டேட்டுகள், சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகள், இணையதளக் கதைகள் மற்றும் பலவற்றைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளின் தகவல்களை பெறுங்கள்.
First Published :
October 01, 2025 3:07 PM IST