Last Updated:October 01, 2025 12:44 PM IST
வெறும் 5 ஆயிரம் ரூபாயுடன் இந்தியா வந்து ஒரு காலத்தில் ஒருவேளை உணவுக்கே கஷ்டப்பட்ட நடிகை ஒருவர், தற்போது வெறும் 5 நிமிடங்கள் நடித்தாலே பல கோடி வருமானம் ஈட்டுகிறார். அவர் யார் தெரியுமா?

சினிமா துறையில் சாதிப்பதற்கு அதிர்ஷ்டம் முக்கியம் என்று கூறப்பட்டாலும், கடினமாக உழைப்பவர்கள் மட்டுமே காலூன்ற முடியும். இல்லையெனில் அதிர்ஷ்டத்தால் கிடைத்த வாய்ப்புகள் எல்லாம் காலப்போக்கில் மறைந்துவிடும். அதனால் தான் ஹீரோ, ஹீரோயினாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் இண்டஸ்ட்ரியில் இறங்குபவர்களில் ஒரு சிலர் மட்டுமே இலக்கை அடைகிறார்கள். ஆனால் திரைப்படங்களில் ஆர்வம் கொண்ட ஒரு இளம் வெளிநாட்டுப் பெண், இந்தியத் திரையுலகில் கலக்கி வருகிறார்.
கனடாவில் பிறந்து வளர்ந்த இந்த அழகி ரூ.5000 உடன் இந்தியா வந்துள்ளார். பல கஷ்டங்களுக்குப் பிறகு சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்தன. இப்போது ஐந்து நிமிட பாடலுக்கு நடனமாடுவதற்காக பல கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். அவர் வேறு யாருமல்ல, கனேடிய நடனக் கலைஞரும் நடிகையுமான நோரா ஃபதேஹி தான்.
பாகுபலியில் "மனோஹரி" பாடலுக்கு ஆட்டம் போட்ட நோரா ஃபதேஹி, இந்தியாவிற்கு வந்த புதிதில் பல சிரமங்களை எதிர்கொண்டார். ஆரம்ப நாட்களில் சாப்பிடுவதற்கே வழியில்லாத நிலை. ஆனால் இப்போது அவர் பெரிய அளவில் சம்பாதிக்கிறார். இவர் சல்மான் கான், வருண் தவான் போன்ற நட்சத்திர ஹீரோக்களுடன் நடித்துள்ளார். சினிமாவில் 5 நிமிடம் நடித்தாலும் கோடிக் கணக்கில் சம்பளம் வாங்குகிறார்.
நோரா ஃபதேஹி பிப்ரவரி 6, 1992 அன்று கனடாவின் மாண்ட்ரீலில் பிறந்தார். பெற்றோர் மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம்கள். ஆனால் தந்தையின் பூர்வீகம் இந்தியாதான். சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதனால்தான் இந்தியா வந்தார். அதற்கு முன் அவர் ஒரு நல்ல நடனக் கலைஞராக அறியப்பட்டார்.
'ரோர்: டைகர்ஸ் ஆஃப் தி சுந்தர்பன்ஸ்' என்ற ஹிந்திப் படத்தின் மூலம் நோரா தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், 'பாகுபலி: தி பிகினிங்' படத்தில் மனோஹரி, 'டெம்பர்' படத்தில் இட்டகே ரெச்சிபோடம், கிக் 2 இல் கிருகு கிக், ஷேர் படத்தில் நாபேரே பிங்கி, லோஃபர் படத்தில் நேப்பே தோச்சே போன்ற சிறப்புப் பாடல்களுக்கு நடனமாடினார் .
நோரா ஒரு சிறந்த நடனக் கலைஞர். மிகவும் கடின உழைப்பாளியும் கூட. இவையே இத்துறையில் அவரது வெற்றிக்குக் காரணம். ஒரு நேர்காணலில் பேசிய அவர், இந்தியா வந்தபோது நிறைய கஷ்டங்களை சந்தித்ததாக கூறினார்.
“நான் இந்தியாவில் இறங்கியபோது, என்னிடம் ரூ. 5,000 மட்டுமே இருந்தது, நான் உட்பட ஒன்பது பேர் 3 BHK வீட்டில் இருந்தோம். என் அறையை வேறு இரண்டு பெண்கள் பகிர்ந்து கொண்டனர். அந்த நேரத்தில், “கடவுளே.. நான் ஏன் நரகத்திற்கு வந்தேன்?” என்று நினைத்துக் கொண்டிருந்தேன். "அந்த நாட்களை இப்போது நினைத்தாலும் பயம் வருகிறது" என்று அவர் கூறினார்.
அந்த நேரத்தில், நோரா ஒரு நாளைக்கு ஒரு முட்டை மற்றும் ரொட்டியை மட்டுமே சாப்பிட்டார். தனக்கு கிடைத்த பணத்தின் பெரும்பகுதியை கலைஞர்களுக்கு வாய்ப்பு வாங்கித் தரும் முகவர்கள் எடுத்துக் கொண்டதாகவும், அவர்கள் தனக்கு மிகக் குறைந்த சம்பளமே கொடுத்ததாகவும் அவர் கூறினார்.
இறுதியில், கத்ரீனா கைஃப், சல்மான் கான் போன்ற பெரிய நட்சத்திரங்களுடன் 'பாரத்' படத்தில் நடித்தார் நோரா ஃபதேஹி. இப்படம் சுமார் ரூ.300 கோடி வசூல் செய்தது. வருண் தவானுடன் 'ஸ்ட்ரீட் டான்சர் 3டி' படத்தில் நடித்தார். அதுவும் ஹிட்டானது.
தற்போது ஒரு படத்துக்கு ரூ.1 கோடியும், ஒரு பாடலுக்கு ரூ.2 கோடியும் வசூலிக்கிறார் நோரா. அண்மையில் ‘மடகான் எக்ஸ்பிரஸ்’ படத்தில் நடித்தார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறவில்லை. நோரா ஃபதேஹி விரைவில் 'டான்சிங் டாட்' படத்தில் நடிக்கவுள்ளார்.

ஆயுதபூஜைக்கு கார் வாஷ் பண்ண போறீங்களா ? அப்போ இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க..!
ஆயுதபூஜைக்கு கார் வாஷ் செய்யும் போது இன்டீரியர், எக்ஸ்டீரியர், டயர், இஞ்சின் ஆகியவை முக்கியம்.
காரின் டேஷ் போர்டு, கன்சோல் ஆகியவற்றை சுத்தம் செய்ய வேண்டும், ஃபங்கஸ் உருவாகாமல் பார்த்துக்கொள்ள.
டயர் சுத்தம் செய்த பிறகு டயர் பாலீஷ் செய்ய வேண்டும், ஆர்கானிக் ஃபோம் வாஷ் பயன்படுத்தலாம்.